districts

ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிலாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, நவ.26- ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கை களை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, ரேசன்  முறையை பலப்படுத்த வேண்டும். அனைவருக் கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், நாட்களை அதிகப்படுத்தி, கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். விவ சாயிகளின் விளைப் பொருட்களுக்கு கட்டுப்படி யான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை களை உருவாக்க வேண்டும். அரசு நிறுவனங் களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற் கக்கூடாது. மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும். நான்கு  தொழிலாளர் சட்ட தொகுப்புகள், மூன்று குற்ற வியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். ஒப்பந்த முறையை ஒழித்து, ‘சம வேலைக்கு சம  ஊதியம்’ என்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு  முழுவதும் அனைத்து தொழிற்சங்கம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சி.முருகன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாக ராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்புமணி, மாவட்டச் செய லாளர் சண்முகராஜா, ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் கே.மணி, துணைத்தலைவர் சுதர்சனம், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் மாதையன், ஏஐசி சிடியு மாவட்ட நிர்வாகி சிவராமன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர்கள் சோ. அருச்சுனன், எம்.குமார், கே.என்.மல்லையன், கே.கோவிந்தராஜ், சின்னசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம். முத்து உட்பட திரளான தொழிலாளர்கள், விவ சாயிகள் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, எச்எம்எஸ் நிர்வாகி கணே சன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவரும், முன்னாள்  சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு, சாலை போக்குவரத்து மாநில துணைத்தலைவர் எஸ். கே.தியாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஏ.கோவிந்தன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, எல்பிஎப் நிர்வாகிகள் பொன்னி பழனியப்பன், கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி நிர் வாகி முனுசாமி, ஏஐசிசிடியு நிர்வாகி வேல்முரு கன், ஐஎன்டியுசி நிர்வாகி நடராஜன், எஸ்கேஎம் நிர்வாகி ஏ.ராமமூர்த்தி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் பெரியசாமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் என்.செல்வராஜ் முன்னிலை  வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலா ளர் தனசேகரன், மாவட்டத் தலைவர் ஜெயரா மன், ஏஐசிசிடியு நிர்வாகிகள் கார்த்திகேயன், வெங்கடேசன், எல்டியுசி நிர்வாகி புகழேந்தி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் எம்.அசோகன், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆதி நாராயணன், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி துரை, எம்எல்எப் நிர்வாகி ரமேஷ் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால் ரோட்டில்,  ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்ன சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச்  செயலாளர் வி.மாரியப்பன் சிறப்புரையாற்றி னார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணி யன், எல்பிஎப் தங்கமுத்து, ஐக்கிய விவசாயி கள் முன்னணியின் சார்பில் கி.வெ.பொன்னை யன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செய லாளர் எச்.ஸ்ரீராம், துணைத்தலைவர் சி.ஜோதி மணி, வி.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பு  எல்பிஎப் நிர்வாகி நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எச்எம்எஸ், ஐஎன்டியூசி, எம்எல்எப் ஆகிய தொழிற்சங்கத்தினரும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசாயத் தொழி லாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர், மாணவர் சங்கங்கள், தமுஎகச, இளைஞர், மாணவர் பெரு மன்றம், கலை இலக்கிய பெருமன்றம் உள்ளிட்ட  அனைத்து வர்க்க வெகுஜன சங்கங்களின் நிர் வாகிகள், ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடல் முன்பு  சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கரலிங்கம், எல்பிஎப் கவுன்சில் செயலாளர் ஜெயராமன், ஏஐ டியுசி மாவட்டத் தலைவர் மூர்த்தி, ஐஎன்டியுசி நிர்வாகி ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட் டச் செயலாளர் சி.வினோத், ஏஐடியுசி மண்டலச் செயலாளர் தங்கதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்டப் பொருளா ளர் நவீன்சந்திரன், நகராட்சி ஊழியர் சங்கச் செய லாளர் கே.பழனிச்சாமி, எல்பிஎப் ஆனந்த் வாசு தேவன், ஏஐடியுசி மோகன்னன் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர். முடிவில், ஐஎன்டியுசி தலைவர் மகேந்திரன் நன்றி கூறி னார்.

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, எம்எல்எப் தலைவர் மு.தியாகராஜன் தலைமையேற்றார். இதில் எல்பிஎப் பெரியசாமி, சிஐடியு செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி எம்.ஆறு முகம், எச்எம்எஸ் ராஜாமணி, ஐஎன்டியுசி சண் முகம், ஏஐசிசிடியு பாலசுப்பிரமணியம், எல்டி யுசி ஜெயபிரகாரஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விதொச செயலாளர் துரைசாமி, விவசாயிகள் கூட்டமைப் பின் தலைவர் சு.பழனிச்சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.