தருமபுரி, ஜூலை 16- “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத் தின்கீழ், அரூர் ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள அனைத்து ஊராட்சி மக்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, தினக் கூலியாக ரூ.600 வழங்கி, அரூர் பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுப டுத்த வேண்டும். வேலை செய்யும் இடங்களில் குடிநீர், நிழற்கூடம், மருத்துவ வசதி செய்து தர வேண் டும். பழுதடைந்து காணப்படும் அனைத்து தொகுப்பு வீடுகளையும் சரி செய்திட கூடுதலாக நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும். ஆதிதிரா விட நலத்துறையின் கீழ் வழங் கப்பட்ட மனைப்பட்டாவினை கிராம நத்தமாக வகைமாற்றம் செய்ய வேண்டும். “கலைஞரின் கனவு இல் லம்” திட்டத்தில், வீடு இல்லாத ஏழை மக்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கே. குமரேசன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றியப் பொருளாளர் எம்.வீரப்பன், ஒன்றிய நிர்வாகிகள் எம்.தங்கராஜ், பி.சொக்கலிங்கம், சி.தேசிங்குராஜா உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். முடி வில், வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்கத்தின் தலைவர்கள் வழங்கினர்.