districts

நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 15-  இந்தியா கூட்டணி சார்பில், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி வெற்றிக்கு நன்றி தெரிவிக்க, பேராவூரணி சட்டமன்றத் தொகு திக்கு தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வருகை தந்தார்.

அப்போது, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை யில், கிழக்கு கடற்கரை சாலை தென்னை விவசாயிகள் சங்க (எக்ஃபா) இ.வீ.காந்தி, கௌரவத் தலைவர் யு.வேலுச்சாமி, துணைத் தலைவர் பி.கோவிந்தசாமி உள்ளிட்டோர் மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், “தேங்காய் விலை வீழ்ச்சியினால் தென்னை விவசாயிகள் தங்கள் உற்பத்தி செலவுக்கான விலைகூட  கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே, பேராவூரணிக்கு தனியாக ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்து கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலை யத்தை அமைக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூட இடத்திற்கான ஒப்புதலை பெற்றிடவும், கிடங்கு மற்றும் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு தேவையான தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு பெற்றிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தஞ்சை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனை மனதில் கொண்டு நீண்டகால திட்டமாக தென்னை சார்ந்த தொழில் பூங்கா அமைத்துத் தர  வேண்டும். மேலும், தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து ஏற்று மதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளில் பாமாயில் எண்ணெய் விற்பனை செய்வதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதன் மூலம் தேங்காய் விலை வீழ்ச்சி அடைவதை தவிர்க்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்” என கூறப்பட்டுள்ளது.