தஞ்சாவூர், ஆக.23 - தஞ்சாவூரில் தென்னகப் பண் பாட்டு மையம் சார்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற உலக நாட்டுப் புறக் கலை தின விழாவில், 800-க்கும் அதிகமான நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்று பேரணியாகச் சென்றனர்.
மருத்துவக் கல்லூரி சாலை முனி சிபல் காலனியில், இந்தப் பேரணியை அரசு சிறப்பு வழக்குரைஞர் எஸ்.இளஞ் செழியன், ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் குழந்தையம்மாள், நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளி யம்மை பாஸ்கரன் ஆகியோர் தொ டங்கி வைத்தனர்.
மருத்துவக் கல்லூரி சாலை வழி யாகச் சென்ற இந்தப் பேரணி தென்னகப் பண்பாட்டு மையத்தில் முடிவடைந் தது. இதில், 800-க்கும் அதிகமான நாட்டுப் புறக் கலைஞர்கள் நாட்டுப்புற இசைக் கருவிகளை இசைத்தும், கரகாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நட னங்கள் ஆடியும் சென்றனர். பின்னர், மையத்தின் திறந்தவெளி அரங்கில் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண் டார். விழாவில் தென்னகப் பண் பாட்டு மைய இயக்குநர் கே.கே.கோபால கிருஷ்ணன், நிர்வாக அலுவலர் சீனி வாசன், நிகழ்ச்சி அலுவலர் ஆர்.உமா சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.