தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள சந்திலிருந்த மின்கம்பம் பழுதடைந்திருந்தது. இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானது. செய்தியின் எதிரொலியாக மின்கம்பம் சீரமைக்கப்பட்டது. இதேபோன்று கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் மின் கம்பங்களுக்கு இடையே மின் கம்பிகள் தொங்கிக் கொண்டிருப்பது குறித்து செய்தி வெளியானது. அந்த மின் கம்பிகளும் சீரமைக்கப்பட்டன.