districts

img

மாவட்டங்களில் சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்

தஞ்சாவூர், செப்.1- ஒன்றிய மோடி அரசின் மக்கள்  விரோத கொள்கைகளைக் அம்ப லப்படுத்தும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டம் முழுவதும், மக்கள் சந்திப்பு  இயக்கம் தெருமுனை பிரச்சாரக் கூட் டங்கள் நடைபெற்று வருகின்றன.  இதையொட்டி, தஞ்சை மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், நந்த வனப்பட்டி, ஆவாரம்பட்டி, பூதலூர் ஆகிய மூன்று இடங்களில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம், கட்சி ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை யில் நடைபெற்றது.  இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பேசினார்.  முன்னதாக நந்தவனப்பட்டியில் மறைந்த பொதுவுடமை இயக்கத் தோழர் ராஜப்பாவின் 15-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கொடியேற்றி வைக்கப்பட்டு, தோழர் ராஜப்பாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குடவாசல் 
குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி ஒகை கடைவீதி மற்றும் பள்ளிவாசல் வரை உள்ள வர்த்தக வியாபாரிகளும் ‘‘இந்தி யாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’’ என்ற துண்டறிக்கையை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலை மையில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.கலைமணி, மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்டோரியா மற்றும்  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம், கிளரியம்,அம்மையப்பன், அர சவனங்காடு, மணக்கால், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு  பிரச்சார நடைபெற்றது. இயக்கத்திற்கு கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் தலைமையேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.சீனிவாசன், எஸ்.தம்புசாமி, கே.செந்தில் மற்றும் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

;