districts

img

தொடர் மழை அறுவடைக்கு தயாரான பொங்கல் கரும்புகள் சேதம்

தஞ்சாவூர், நவ.13-  தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. கடந்த சில நாட்க ளாக தொடர்மழை பெய்து  வந்த நிலையில், சனிக்  கிழமை வெயில் தலைகாட்டத் தொடங்கியது. ஞாயிற் றுக்கிழமை மீண்டும் பர வலாக மழை தொடங்கியது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.  மேலும், இந்த மழை யால் தஞ்சாவூர் மாவட்டம் பாச்சூர் அருகே அய்யம்  பட்டியில் அடுத்த மாதம் அறு வடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் எண்ணிக்கையி லான சுமார் 2 ஏக்கர் பொங் கல் கரும்புகள் வேருடன்  கீழே சாய்ந்துள்ளன. இதே போல் சூரக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, அணைக்  கரை போன்ற இடங்களிலும் பொங்கல் கரும்புகள் அதிக மழையின் காரணமாக கீழே சாய்ந்துள்ளன. சாய்ந்த பொங்கல் கரும்புகளை விவசாயிகள் நிமிர்த்தி ஒன்றி ணைத்து கட்டி வருகின்ற னர்.
மூதாட்டி உயிரிழப்பு
பூதலூர் அருகே இந்த ளூர் ஊராட்சி நெடுங்குளம் குடியானத் தெருவை சேர்ந் தவர் முருகையன் மனைவி செல்லபாப்பா (55). கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். இந்நிலையில், மழையின் காரணமாக மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டின்  சுவர் ஊறி, அதிகாலை நேரத்  தில் தூங்கிக் கொண்டிருந்த செல்லபாப்பா மீது இடிந்து விழுந்தது. இதில் அவர் சம்  பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.