தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பேரூராட்சி சார்பில் ரூ.11 லட்சம் மதிப்பிலான புதிய திடக் கழிவு மேலாண்மை வாகனத்தை அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி தலைவி இலக்கியா, துணைத் தலைவி பொன்னழகு, செயல் அலுவலர் குமரேசன், திமுக அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், மெலட்டூர் பேரூர் செயலர் சீனு, சன்.சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.