districts

img

தனியார் தொழிற்சாலையில் ஆட்குறைப்பு நடவடிக்கை

சேலம், ஜூலை 16- தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகம் 230 தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு  தெரிவித்து, அனைத்து தொழிற்சங்கத் தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகரில் செயல்பட்டு வரும் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகம் 230 தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய் வதாக அறிவித்துள்ளது. இதனை உடன டியாக திரும்பப்பெற வேண்டும். லே  ஆப் நடவடிக்கையை கைவிட வேண் டும். புதிய சம்பள ஒப்பந்தத்தை உடன டியாக பேசி தீர்வு காண வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு, ஏடிபி, ஐஎன்டியுசி, எல்பிஎப் உள் ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திங்களன்று தலேமா கம்பெனி ஆலை நுழைவாயில் முன்பு உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க சேலம் மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் ஏ.சபி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி துவக்க உரையாற்றினார். எல்பிஎப் மாவட்ட கவுன்சில் துணைத்தலைவர் பி.கிருஷ் ணமூர்த்தி, எல்பிஎப் தலைவர் கே.விஜ யன், ஐஎன்டியுசி தலைவர் ஜி.நடேசன், அண்ணா தொழிற்சங்க தலைவர் ஜெயச் சந்திரன், சிஐடியு செயலாளர் ராதா கிருஷ்ணன் உட்பட திரளான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு  பொதுத்தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பொன்.ரமணி நிறைவுரை யாற்றினார்.