districts

img

ஏழை மக்கள் மீது சுமையை ஏற்றும் மின் கட்டண உயர்வு!

சேலம் ஜூலை 25- மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும் பப்பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். ஒன்றிய பாஜக அர சின் மின்சார தனியார் மயமாக்களுக்கு தமிழக அரசு அடிபணியக்கூடாது. ஏழை, எளிய மக்கள் மீது மீண்டும் சுமையை ஏற்றக்கூடாது. சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிப்படி,  மாதந்தோறும் மின் அளவு கணக்கிட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை மாநில அரசே உற் பத்தி செய்யும் வகையில், மின் உற்பத்தி திட்டங் களை செயல்படுத்த வேண்டும். அதானி நிறுவ னத்துக்கு வழங்கும் கொள்முதல் விலையை  குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம். குணசேகரன், ஐ.ஞானசௌந்தரி, பொன்.ரமணி,  எஸ்.கே.சேகர், ஜி.கணபதி, மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ், தாலுகாச் செயலா ளர்கள் என்.ஈஸ்வரன், எஸ்.வசந்தி, முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆவேச ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் என்.கந்தசாமி தலைமை வகித் தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். மாரிமுத்து, நகரச் செயலாளர் சி.முரளி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே.பூபதி, ஏ.ஜெயா,  ஜி.நாகராஜன், எம்.அருள்குமார், கே.கோவிந்த சாமி, தமிழ்மணி பி.ரவி, நிர்மலா ராணி, மணி கண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாப்பி ரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே சிபிஎம் மூத்த தலைவர் எஸ்.தீர்த்தகிரி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட் டச் செயலாளர் ஏ.குமார், வட்டச் செயலாளர் தி.வ.தனுசன், மாவட்டக்குழு உறுப்பினர் சி. வஞ்சி மற்றும் மனோகரன், டி.சேகர், சொக்கலிங் கம், அம்புரோஸ், கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலக்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்டச் செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன், வட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். காரிமங்கலத்தில் வட்டச் செயலாளர் பி.ஜெயராமன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி, சிஐ டியு மாவட்ட துணைச்செயலாளர் ஆணஸ்ட் ராஜ், கே.எம்.முருகேசன், சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இண்டூரில் பகுதிக்குழுச் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.என்.மல்லையன், கோவிந்தசாமி, பரம சிவம், குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர். பாப்பாரப்பட்டியில் பகுதிச் செயலாளர் ஆர். சின்னசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. விஸ்வநாதன் மற்றும் சக்திவேல், கிட்டு (எ) சண் முகம், லோகநாதன், அன்பரசு, சிலம்பரசன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

பென்னாகரத்தில் ஒன்றியச் செயலாளர் வி.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், நகரச் செயலாளர் வெங்கடாச்சலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.ஜீவானந்தம், குமார், ராஜி, அன்பு, சிவா ஆகியோர் கலந்து  கொண்டனர். கொப்பலூரில் பகுதிச் செயலாளர் ஜி.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசு பாலன், பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளியில் ஒன்றியச் செய லாளர் எஸ்.சின்னராசு தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, மூத்த தலைவர் பி.இளம் பரிதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.குப்பு சாமி, கே.எல்லப்பன் ஆகியோர் கலந்து கொண் டனர். அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பி.குமார் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச் சுணன் மற்றும் எஸ்.கே.கோவிந்தன், தனலட்சுமி,  ஏ.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர். மொரப் பூரில் ஒன்றியச் செயலாளர் கே.தங்கராஜ் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, பி.வி.மாது உட்பட பலர் பங்கேற்றனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆனங் கூர் பிரிவு சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் நகரக்குழு உறுப்பி னர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர். முருகேசன், நகரச் செயலாளர் என்.சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் - சங்ககிரி  சாலை, ஒட்டமெத்தை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.குமார் தலைமை வகித்தார். இதில் மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே.மோகன், கோவிந்த ராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி ஆகி யோர் கலந்து கொண்டனர். எலச்சிபாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் மேற்கு ஒன்றியச் செயலா ளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித் தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், மூத்த தோழர் சி.சுந்தரம், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வீ.தேவராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் பழனியம்மாள், மோட்டார் சங்க மாவட்டப் பொருளாளர் சத்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இதேபோன்று, பல்லக்காபாளையத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங் கத்தின் ஒன்றியத் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில் விவசாய சங்க மாநி லச் செயலாளர் சி.துரைசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர்.