districts

img

குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவிகள் மயக்கம்

ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், குடற்புண் மாத்திரைகளை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு சார்பாகக் குடற்புண் மாத்திரைகள் 2,400 மாணவிகளுக்கு இன்று வழங்கப்பட்டது. இந்த மாத்திரைகளை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சில மணி நேரத்திலேயே மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து, மயக்கமடைந்த மாணவிகள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

;