சென்னை,ஆக,18-
"குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி முதல்வர் கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “சனாதன தர்மத்தை, சாதியை காப்பாற்றி நிலைக்க வைக்கும் தத்துவத்தைப் பாதுகாப்பதே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் பாஜக ஆட்சியின் செயல்பாடாகும். உயர்ந்தவன் - தாழ்ந்தவன்; தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன் என்று மனி தர்களை வேற்றுமைப்படுத்தி, அடிமைப்படுத்திய குலதர்மப் பாம்பு, பிரதமர் மோடிஆட்சியில் திடீரெனப் படமெடுத்தாடி அதன் நச்சுப் பல்லை நீட்டிக் காட்டுகிறது. ‘‘விஸ்வகர்மா திட்டம்‘’ என்பதின்படி ஒரு புதிய குலதர்மத் தொழிலைப் புதுப் பித்து, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது சுமத்தப்பட்ட அந்தப் பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பித்து, அந்த ‘‘கீழ்சாதியர் அவரவர் குலத் தொழிலை கிராமங்களிலும், நக ரங்களிலும் 30 லட்சம் பேர் செய்வார்கள் - அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்று ஆகஸ்ட் 15 ஆம் நாளில் டெல்லி செங்கோட்டை உரை யில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
‘‘பி.எம். விஸ்வகர்மா’’ திட்டம் என்பதை அமைச்சரவையின் பொரு ளாதார குழு ஏற்று ரூ.13,000 கோடி ஒதுக்கியுள்ளது. பள்ளிக் கூடங்களுக்குப் பதிலாக குரு - சிஷ்ய பரம்பரைக் கல்விப் பயிற்சியாம். 2023-2024 முதல் 2027-2028 வரை இத்திட்டப்படி குலத் தொழிலை செய்ய அவரது வாரிசுகளுக்கு, குடும் பத்தினருக்கு கற்றுக் கொடுப்பார் களாம். அதற்கு இந்த 13,000 கோடி ரூபாயாம்.18 பாரம்பரிய குலத் தொழிலை அடையாளம் கண்டுள்ளார்களாம்.
தச்சுத் தொழில், படகு செய்தல், கருமான் பட்டறைத் தொழில், குய வன் மண்பாண்டத் தொழில், சுத்தி முதல் துடைப்பம் - விளக்குமாறு கட்டும் தொழில் (Broom Maker), பொம்மை செய்தல், சிகை திருத்தும் தொழில்(Barber), கைத்தறித் தொழில், பூக்கட்டும் தொழில், சலவைத் தொழில், தையல் தொழில், மீன் பிடித் தொழில் முதலியன இத்திட்டத்தில் வருகிறதாம். இதனைச் செய்யப் பழகுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை மானிய அடிப்படையில் கடன் அளிப்பார்களாம்.தூண்டில் எவ்வளவு லாவகமாக அமைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா?\ இளைஞர்களே, நீங்கள் உங்கள் குலத்தொழிலைச் செய்தாக வேண்டும் என்றால், நிரந்தர இழிவும், அடிமைத்தனமும்தான் இந்த பாஜக ஆட்சியில் உங்களுக்குக் கிட்டும்,
சமத்துவ சமுதாயம் காண விரும்பும் அனைவரும் ஒன்றுபட்டு உடனடியாக ஓர் அணியில் திரண்டு எழுந்து எதிர்ப்புக் கடலாய்ப் பொங்கி எதிர்த்து இத்திட்டத்தை கருவிலேயே அழித்து, குலத்தொழில் பாதகத்தை ஒழித்துக் கட்டவேண்டும். தமிழகம் இத்திட்டத்துக்கு ஒருபோதும் இசைவு தராது; கடுமையாக எதிர்க்கும் என்பதைப் பிரகடனப்படுத்துவதும் அவசர, அவசியம்" என்றும் வீரமணி கூறியுள்ளார்.