மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
செங்கல்பட்டு, டிச.16- காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். (வயது 29) மதுராந்தகம் வட்டம், மூசிவாக்கம் கிராமத் தில் தங்கி மரம் வெட்டும் தொழில் செய்து வந்துள் ளார். இந்நிலையில் வெள்ளி யன்று (டிச.15) மூசிவாக்கம் கிராமத்தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றபோது அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்த பீங்கான் உடைந்து மின் கம்பி மகேந்திரன் மீது விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரி ழந்தார். தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் காவல் துறையினர் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
துரைப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, டிச. 16 - ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப அதிவிரைவுச் சாலையில் (ஓஎம்ஆர்)யில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சோழிங்க நல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி யு வளைவு வழியாக திரும்பி செல்ல வேண்டும். பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திரும்பி பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள யு வளைவு வழியாக சோழிங்கநல்லூர் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். கார்ப்பரேஷன் சாலை யில் இருந்து வரும் வாகனங் ங்கள் இடதுபுறம் திரும்பி, பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள யு வளைவு வழியாக துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்கு செல்ல வேண்டும்.
புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி பெங்களூருவில் கைது
சென்னை, டிச. 16- கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, செம்மஞ்சேரி பகுதியில் குடிபெயர்ந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயந்தி, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கு தொடர்பாக துரைப்பாக்கம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறை வளாகத்தில் பெண்கள் சிறை யில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஜெயந்திக்கு கடந்த 13ஆம் தேதி கைதிகளை பொதுமக்கள் பார்வையிடும் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அப்போது, அந்த அறை வழியாக அவர் தப்பியோடியதாகவும் அது உடனடியாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. வழக்கம் போல் அன்று மாலை கைதிகளை சிறை காவலர்கள் கணக்கெடுக்கும் போது, ஜெயந்தி காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து புழல் காவல்துறையி னர் தப்பியோடிய ஜெயந்தியை தேடி வந்த நிலையில், அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: டாக்டர் மீது வழக்குப் பதிவு
சென்னை, டிச. 16- சென்னை தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றுபவர் இளங்கும ரன் (37). அவர் பணிபுரி யும் மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பெண் ஒருவர் கருக் கலைப்பு செய்வதற்கு தனது கணவருடன் வந்துள் ளார். அந்தப் பெண் மருத்துவ மனையில் மயக்க மருந்து நிபுணராக இருந்து வரும் இளங்குமரனிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை இளங்குமரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தான் மயக்க நிலையில் இருந்தபோது, இளங்குமரன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புதன்கிழமை தனது கண வரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆரம்பத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட நிலை யில், பின்னர் இளங்குமரன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41 (ஏ) இன் கீழ் காவல் துறை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. மேலும், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 (ஏ) மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத் தல் தடைச் சட்ட பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் காவல்துறையினர் நடந்தது குறித்து எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கி விசாரணை நடத்தி வருகின் றனர்.
உளுந்தூர்பேட்டை சாலை விபத்தில் 2 ஓட்டுநர்கள் பலி
உளுந்தூர்பேட்டை, டிச.16- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து-சரக்கு லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 2 ஓட்டுநர்கள் பலியானார்கள். சென்னையிலிருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 30க்கும் அதிகமான பயணி களை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது, இந்த பேருந்தை கரூரை சேர்ந்த மணி (49) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த பேருந்து சனிக்கிழமை (டிச.16) அதி காலை உளுந்தூர்பேட்டை அடுத்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை யின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் ஏறி எதிரே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கர மாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மணி மற்றும் பீகாரை சேர்ந்த லாரி ஓட்டுநர் சந்தோஷ் குமார் (36) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம்,டிச.16- விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காராமணி, உளுந்து, பச்சை பயிறு, பெரும்பயிறு உள்ளிட்ட பல்வேறு வகையான பணி பயிர் வகைகளை பெரும்பாலான விவசாயிகள் மழையை நம்பி மானாவாரியாக விதைத்து அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி அனைத்து பணப் பயிர் வகைகளை விதைத்திருந்தனர். முளைப்பு வந்த நிலையில் தற்போது திடீர், திடீரென பெய்து வரும் சாரல் மழையால் பயிர் நன்கு வளரும் என விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிறார்-மகளிர் இல்லங்கள், விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி டிச.16- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகளை உடனடியாக பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி தனியாரால் நடத்தப்படும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகளை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். மேலும் ஒரு உள்ளூரையோர் தங்குவதற்கு சராசரியாக சிறார்களுக்கு 40 சதுர அடி மற்றும் மகளிர்க்கு 120 சதுர அடி இடத்தை ஒதுக்கீடு செய்வதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். குளியல் மற்றும் உடை மாற்றும் அறையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதி காப்பகங்களில் விடுதி காப்பாளர் பெண்ணாகவும் விடுதி பாதுகாவலர் ஆணாகவும் இருக்க வேண்டும். விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாவலர் காவல் துறையிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு மற்றும் விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார்.