விழுப்புரம், டிச.8 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழி லாளர் சங்கத்தினர் நடத்தும் வேலை நிறுத்த போராட்டம் குறித்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், ஓய்வூதியத்திற்கு ஒப்பந்த பலன், அகவிலைப் படி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும், 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 19 அன்று வேலை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.