திருவண்ணாமலை, டிச.30 - மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தையடுத்து, பழங்குடியின மக்க ளுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்தார். திருவண்ணாமலை மாவட்டம், எடப்பாளையம் கிராமம், எம்ஜிஆர் நகரில் 20க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இந்த மக்கள் குடியிருந்து வரும் அந்த இடம் பொது தேவைக்கு வேண்டும் என்று கூறி, வட்டார வளர்ச்சி அலுவலகம், வருவாய்த் ்துறை நிர்வாகத்தின் மூலமாக அந்த வீடுகள் அகற்றப்பட்டன. இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்கு மார், செயற்குழு உறுப்பினர் எஸ்ராமதாஸ், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், மாவட்டக்குழு உறுப்பினர் குமரன் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள், வட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 2 நாட்களில் அங்கு வசித்து வந்த மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் சுரேஷ் உறுதியளித்தார்.