districts

img

பல்லவன் நகர் பூங்கா சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம், செப். 9- காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக கடந்த 2021ஆம் ஆண்டு தரம் உயர்த்தப் பட்டது. மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியாக தரம்  உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டு கள் ஆனாலும் இன்னும் வளர்ச்சி  திட்டங்கள் முழுமை அடைய வில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பெருநகராட்சி என்ற பெயர் பலகையில் கூட மாநகராட்சி என்று  பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் பூங்கா முழுவதும் புதர்  மண்டி காடு போல காட்சியளிக்கி றது. அங்குள்ள விளையாட்டு சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த பூங்கா கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.  தற்போது பூங்கா சரிவர சீரமைக் கப்படாமல் அலங்கோலமாக காட்சியளிப்பதால் இங்கு வரும் பொதுமக்கள் முகம்சுளித்து செல்லும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதம்  நடந்த கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் இந்த பூங்காவை சீரமைக்க ரூ.2 லட்சம்  அனுமதி அளிக்கப்பட்டு இருப்ப தாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை பூங்காவை சீரமைக்க  எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சிப் பணிகள் பெரிய  முன்னேற்றம் இல்லை. போக்கு வரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு  கொள்ளாமல் உள்ளனர். உடனடி யாக பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கூறினர்.