சென்னை, அக். 13- பாடி முதல் திருநின்றவூர் வரை நெடுஞ்சாலையை விரிவு படுத்த வேண்டும் என சிபிஎம் அம்பத்தூர் பகுதி மாநாடு வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடசென்னை மாவட்டம், அம்பத்தூர் பகுதி 15ஆவது மாநாடு கள்ளிக்குப்பத்தில் தோழர்கள் பி.என்.உண்ணி, சு.லெனின் சுந்தர், சுரேந்திரன், கேசவன் நினைவரங்கில் கே.சீனிவாசன் தலைமையில் ஞாயிறன்று (அக். 13) நடைபெற்றது. மூத்த உறுப்பினர் இ.பாக்கியம் கட்சிக் கொடியை ஏற்றி னார். பகுதிக்குழு உறுப்பினர் சி.ஆனந்த் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பகுதிச் செயலாளர் ஆர்.கோபி வேலை அறிக்கையையும், பகுதிக்குழு உறுப்பினர் ஜெ.ரவி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மா.பூபாலன், எல்.பி.சரவணதமிழன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜ் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக க.பிரபாகரன் வரவேற்றார். கே.குணசேகர் நன்றி கூறினார். தீர்மானங்கள் பாடி முதல் திருநின்றவூர் வரை நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி, டிஐ மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும், கிராம நத்தம் பகுதியில் வசிப்பவர்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சமூக நலக் கூடம் அமைக்க வேண்டும், விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பகுதிக்குழு செயலாளர் தேர்வு 9 பேர் கொண்ட பகுதி குழுவின் செயலாளராக எஸ்.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.