சென்னையில் டாக்டர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சென்னை சூளையில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எல்ஐசி பயிற்சி மைய முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையா, சமூக செயற்பாட்டாளர் ஜி.திலகர், டி.சந்தானம், அரும்பாக்கம் கே.வாசுகிநாதன், செயற்பாட்டாளர் டி.சுவிகர் ஜேக்கப், ஆர்.சுரேஷ்குமார், பூர்ணசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.