districts

15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

கள்ளக்குறிச்சி, ஜூலை 18-

      கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர் பேட்டையில் நடைபெறும் அரசு விழாவில்  15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்குகிறார் என்று  அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக் கிறார்.

     இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை ( ஜூலை 19) கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் காலை 9.20 மணிக்கு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா  கொடியேற்றுகிறார். அதனைத் தொடர்ந்து 9.40 மணிக்கு ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியின் கூவனூரில் கீழ் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வசதியுடன் கூடிய பயணியர் நிழற் குடையை திறந்து வைக்கிறார்.

      அதனைத் தொடர்ந்து, மாடாம் பூண்டியில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொடியேற்றுகிறார். பிறகு, லா.கூடலூர் தியாகதுருகத்தில் பால் முகவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும், தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்களுடன் கலந்துரை யாடுகிறார்.  

    பகல் 12.45 மணிக்கு மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிப்  பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு உலகங்காத்தான் கிராமத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட் டுக்கு தொடங்கி வைத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.  

    பின்னர், மாடூர் ஏ.என்.பி திருமண  மண்டபத்தில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்குகிறார். அதன்பிறகு, எலவனா சூர்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு  கொடியேற்று விழாவில், நிறைவாக உளுந்தூர்பேட்டையில்  திமுக  சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களு டன் கலந்துரையாடலும், திமுக முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள், பயனாளிகள், திமுக  வினர் உள்ளிட்ட அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.