வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்