districts

img

விருத்தாசலத்தில் காத்திருப்பு போராட்டம்

கடலூர்,ஆக.22-

     விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு சிபிஎம் சார்பில் குடிமனைப்பட்டா கேட்டு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

    விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்ட கோ. பொன்னேரி, ஊ.மங்கலம், சேப்பளா நத்தம், கோ. ஆதனூர், சின்ன வட பாடி, இருளக்குறிச்சி, புலியூர் ஆகிய கிராமங்க ளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்து ஆண்டு கணக்கில் காத்திருந்தும்  நடவடிக்கையில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்தும், மனு கொடுத்து காத்திருக்கும் பயனாளிகள் அனைவருக்கும் உடனடியாக குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

     முன்னதாக பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக வந்த கிராம மக்கள் விருத்தா சலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தை துவக்கினர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கருப்பையின் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் வேலன், கனகராஜ், லட்சுமி, வீரமணி, பாண்டியன், வீரன், வெங்க டேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராள மான கலந்து கொண்டனர்.