districts

குடியிருப்புகளை இடித்த அதிகாரிகள்: கிராம மக்கள் ஆவேசம்

திருவள்ளூர், ஜன 11- விளிஞ்சியம்பாக்கத்தில் குடி யிருப்புகளை இடித்த வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு குழு அமைக்கப்பட்டு உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரித்துள்ளார்.  ஆவடியை அடுத்த விளிஞ்சியம் பாக்கம் எண்-5 பாரதிதாசன் நகரில் வசிக்கும்  வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் மற்றும் அனைத்து சமூக மக்கள் 172 குடும்பங்கள் நாடு சுதந்திரம் அடை வதற்கு முன்பிருந்தே வசித்து வரு கின்றனர். ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தால் குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை, தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட மேம்படுத்தப்பட்ட ஒரு பகுதி யாக விளிஞ்சியம்பாக்கம் இணைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் விளிஞ்சியம் பாக்கம் ஏரி நீர்வரத்து சுருங்கி யுள்ளது என்று பத்திரிகை செய்தியை வைத்து நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசார ணைக்கு எடுத்துக்கொண்டது.  மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை அதற்கு நீதிமன்றம் காரணம்  காட்டியுள்ளது.  பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்ட சர்வே எண்ணில் அடங்கிய வீடு, கடைகள் இடிக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் கடந்த மாதம்  10 ஆம் தேதியன்று  ஆவடி வட்டாட்சியர் விஜயகுமார் உத்திரவின் பேரில் ஆவடி துணை வட்டாட்சியர் தலை மையில் அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட வீடு மற்றும் கடை களை இடித்துள்ளனர்.

எந்தவிதமான உத்தரவும் இல்லா மல் வீடுகள், கடைகளை இடித்துத் தள்ளிய ஆவடி வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும், இடித்த வீடுகள், கடைகளை மாவட்ட நிர்வாகமே கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் தலை மையில் வியாழனன்று (ஜன. 11) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து மனு அளித்த னர். மனுவின் அடிப்படையில் வருவாய்த் துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை வீடுகளை இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இந்தபோராட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் இ.கங்காதுரை தலைமை தாங்கினார். மாநில தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டச் செய லாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகி பூபாலன், விவ சாய சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜி.சம்பத், தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத் தின் மாவட்ட நிர்வாகிகள் வேழவேந்தன், சுகுமார், டில்லிகணேஷ், பாண்டி யன் ஆகியோர் பேசினர்.  இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம், விளிஞ்சியம் பாக்கம் பாரதிதாசன் நகர் போராட்டக்குழு, தமிழ்நாடு வேட்டைக்காரன்  பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.