அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்டா சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் முனைவர் இளங்கோவின் துணைவியார் வாசுகி உடல் நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சிதம்பரம் ஓ. பி மெயின் ரோட்டிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துகுமரன், ஜெயச்சித்ரா உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.