புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் மறைந்த தோழர் வ.சுப்பையா-வின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் அக்.12 அன்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி நெல்லித்தோப்பு சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், கலியமூர்த்தி,சத்தியா உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.