குடும்ப அட்டை குறைதீர் முகாம்
சென்னை, பிப். 6- குடும்ப அட்டைகளில் பெயர் சேர்ப்பது, நீக்கம், முகவரி மாற்றம் செய்ய சனிக்கிழமை (பிப்.8 சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!
கிருஷ்ணகிரி, பிப்.6- கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கருவுற்றார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் மீது காவல்துறையில் தாய் புகார் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே சிறுமி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை. உடனே இது குறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காத தால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காக சிறுமியை பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பவில்லை என்று கேட்டார். அதற்கு சிறுமியின் தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம் என்றார். இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். இந்த மாணவி கருவுற்றதற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான் காரணம் என கூறப்படுகிறது. விசாரணையில் 3 பேரும் சேர்ந்து தான் அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலை மையாசிரியர் அறிவுறுத்தினார். அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (வயது57). மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன்காரணமாக மாணவி கருவுற்றதும் தெரியவந்தது.இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கெனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டது நினைவு கூறத்தக்கது.
ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை நகலை கிழித்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்!
கடலூர், பிப்.6- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசி சிடியு உள்ளடக்கிய அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூர், வேலூர்,புதுச்சேரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் வியாழக்கிழமை (பிப்.6) நடைபெற்றது. வேலூர் அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் டி.முரளி (சிஐடியு), வெ.கலைநேசன் (எல்பிஎப்), கே.கோவிந்தராஜ் (ஏஐடியுசி) கா.வெ.திருப்பதி (எச்எம்எஸ்), முகமது அலி ஜின்னா (ஐஎன்டியுசி) ஏ.ஏழுமலை (ஏஐசிசிடியு) ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. எம்.பி.ராமச்சந்திரன் (சிஐடியு), சே.மணி (எல்பிஎப்), எல்.மணி (ஏஐடியுசி) எஸ்.கலைவாணி (எச்எம்எஸ்), பி.சுந்தரம் (ஐஎன்டியுசி) சிம்பு தேவன் (ஏஐசிசிடியு) ஆகியோர் கண்டன உரையாற்றினர். கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டப் பொருளாளர் வீராசாமி, ஏஐடியுசி மாநில நிர்வாகக் குழு வளர்மதி, தொமுச மண்டல தலைவர் அன்பழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பா திரிப்புலியூரில் பட்ஜெட் நகல் கிழித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் பி.கருப்பையன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பி னர் என்.ஆர்.ஜீவானந்தம், எச்எம்எஸ் வட்ட பொருளாளர் சி. அருள் செல்வன், எல்எல்எப் மாவட்ட பொருளாளர் எஸ். சக்தி தாசன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். தொமுச பேரவை இணை பொதுச் செய லாளர் என்.பாரி, சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.பழனிவேல், கே.மனோகரன் (ஐஎன்டியுசி), வி.சரவணன் (எச்எம்எஸ்), பால. ஜெயபிரகாஷ் (எல்எல்எப்), எஸ். குண சேகரன் (ஏஐடியூசி), ஏ.ஆனந்தன் (ஐஎன்டியூசி), டி.ரவிச்சந்திரன் (எச்எம்எஸ்), ஆர்.தமிழ்மணி (எல்எல்எப்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சீனுவாசன், ஏஐடியுசி மாநில செய லாளர் சேதுசெல்வம், ஐஎன்டியுசி தலை வர் ஞானசேகரன் எல்பிஎப் மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் ஆகி யோர் கூட்டாக தலைமை தாங்கினர். மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் முருகன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், மதிவாணன், ராஜ்குமார், புருஷோத்தமன் அபிஷேகம், தினேஷ் பொன்னையா, அந்தோணி, தமிழ்ச்செல்வம், பாலசுப்பிர மணியம் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.