செங்கல்பட்டு, ஏப்.8- செங்கல்பட்டு நகராட்சியில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் பணி துவக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி உறுதி அளித்துள்ளார் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் அமைச்சர் தா. மோ.அன்பரசன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடை திட்ட பணி துவக்கப்படும். புதிய பேருந்து நிலைய பணிகள் விரைவில் முடிக்கப்படும், செங்கல்பட்டு ரயில் நிலை யத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரி கிருஷ்ணன், எம்.கலைச்செல்வி, செங்கல் பட்டு பகுதி செயலாளர் கே.வேலன், நகர செயலாளர் என்.அன்பு, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.மோகன், க.ஜெயந்தி, செங்கல்பட்டு பகுதி குழு உறுப்பினர்கள் எம்.ரவி, மு.முனி செல்வம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, விசிக மாவட்டச் செயலாளர் கனல்விழி, திக மாவட்ட செயலாளர் சுந்தர், செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்தி ரன், திமுக நகர செயலாளர் நரேந்திரன் உள்ளிட்ட இந்தியாகூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்பிரச்சாரத்தில் பொதுமக்கள் வேட்பாளர் செல்வத்திற்கு மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.