districts

img

ஊடகவியலாளர்கள் அஞ்சலி

குன்னூரில் வீரமரணமடைந்த நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கும்  விழுப்புரம் பத்திரிகையளர் நலச்சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அளித்த உறுதியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வாகன நிறுத்த போராட்டத்தை விளக்கி புதுச்சேரியில் சிஐடியு சார்பில் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு பிரதேச தலைவர் முருகன், செயலாளர் சீனிவாசன் நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், மது, மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.