districts

img

டிச.19ல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்க திட்டம்

சென்னை, டிச. 16 - போக்குவரத்து கழகங்களை பாது காக்க, வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டிச.19 அன்று வேலை நிறுத்த அறிவிப்பை தொழிலாளர்கள் வழங்க உள்ளனர். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த் தையை தொடங்க வேண்டும், ஓய்வூதி யர்களுக்கு 2015ம் ஆண்டு முதல்  உயர்த்தப்படாமல் உள்ள அகவிலைப் படி, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வுக்கால பணப்பலன்களை வழங்க வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை முழுமை யாக நிரப்ப வேண்டும்; வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 15, 16 தேதிகளில் அனைத்து பணி மனைகளிலும் பிரச்சாரம் நடை பெற்றது. போக்குவரத்து கழகங்க ளில் செயல்படும் அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச் சங்கங்கள் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டன. இதன் ஒருபகுதியாக மாநகர போக்குவரத்து கழகம், விரைவுப் போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்களிடம் சங்கத் தின் தலைவர்கள் துண்டு பிரசுரம் வழங்கினர். இதன் தொடர்ச்சியாக டிச.19 அன்று  மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மேலாண் இயக்குநர்களிடமும் வேலை நிறுத்த அறிவிப்பை வழங்க உள்ளனர்.