சென்னை, மார்ச் 25 - சென்னை மாவட்டத் திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஞாயி றன்று (மார்ச் 24) முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடை பெற்றது. சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதி களில் 3 ஆயிரத்து 726 வாக் குச்சாவடிகள் வாக்களிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 19 ஆயிரத்து 396 வாக்குச் சாவடி அலுவலர்கள் பணி புரியவுள்ளனர். ஒன்றிய, மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் வாக்குச் சாவடி அலுவலர்க ளாக தேர்வு செய்யப்பட்டுள் ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு 16 மையங்களில் நடை பெற்றது. பயிற்சி வகுப்பில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரம் (விவிபேட்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, ராட்லர் தெரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியினை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ. ராதாகிருஷ்ணன் பார் வையிட்டு ஆலோசனை களை வழங்கினார். தேர்தலில் 100 விழுக் காடு வாக்களிக்க வலி யுறுத்தி மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்ட சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரத்தினையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கூடு தல் மாவட்ட தேர்தல் அலு வலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சரண்யா அறி, தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.