districts

img

மாமல்லபுரத்தில் மழையால் சுற்றுலா பாதிப்பு

மாமல்லபுரம், ஆக.1- மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக மழை  விட்டுவிட்டு பெய்து வரு கிறது. வியாழனன்று  விநாய கர் சதுர்த்தி விடுமுறை நாள் என்பதால், மாலை  வேளையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரு வார்கள் என சுற்றுலாத் துறை, தொல்லியல்துறை எதிர்பார்த்த நிலையில் மழை தொடர்ந்து பெய்த தால் பயணிகள் இல்லா மல் புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப் பட்டது. அர்ச்சுனன் தபசு,  வெண்ணெய் உருண்டைக் கல் பாறை, கடற்கரை கோயில், ஐந்துரதம், புலிக் குகை போன்ற முக்கிய சுற்றுலா பகுதிகளில் சாலை யோரம் வியாபாரம் செய்வோர், வழிகாட்டிகள், ஆட்டோ ஓட்டுநர், பாசி மணி விற்போர் மழை யால் வியாபாரம் பாதிக்கப் பட்டனர். வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்து வரு கிறது. இதனால் இன்னும் சுற்றுலா தொழில் பாதிக்கப் பட்டது.

;