நவ.17 குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னை, நவ.14- கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் அருகில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதால் சூளைமேடு நீர் பகிர்மான நிலை யம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள புதிய நீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நவம்பர் 17 அன்று காலை 7 மணி முதல் 18 ஆம் தேதி மாலை 7 மணி வரை, அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மண்டலம் -8 (அண்ணா நகர்) அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி, மண்ட லம் -9 (தேனாம்பேட்டை) சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோபால புரம், தியாகராய நகர் (பகுதி), தேனாம் பேட்டை, மண்டலம்- 10 (கோடம்பாக்கம்) கோயம்பேடு, சின்மயா நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, ரங்கராஜபுரம், தியாகராய நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், சி.ஐ.டி.நகர், மண்டலம் -11 (வளசரவாக்கம்) தாய்சா அடுக்குமாடி வளாகம் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக் கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத் தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப் படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையும் இன்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, நவ.14- தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிறது. இதனால் சென்னை மாநகரத்தில் திங்கட்கிழமை (நவ.13) முதல் செவ்வாய்க்கிழமை (நவ.14) மாலை வரை அதிகபட்சமாக 7 செ.மீ மழை கொட்டித்தீர்த்துள்ளது. மாநகரத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் வழிந்தோடுகிறது. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதன்கிழமை (நவ.15) மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். நிலைமையை பொறுத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வண்டலூரில் குவிந்த 20 ஆயிரம் பேர்
செங்கல்பட்டு,நவ.14- வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, லயன் சஃபாரி உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து விலங்குகள், பறவைகள் ரசித்து செல்கிறார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை ெயாட்டி வண்டலூர் பூங்காவுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை, அதிகரித்தது, திங்களன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பூங்காவில் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர். தீபாவளி விடுமுறை கடந்த 2 நாளில் மட்டும் 20 ஆயிரம் பேர் பூங்காவிற்கு வந்துள் ளனர்.
64 ஏரிகள் நிரம்பின
சென்னை,நவ.14- கனமழை எதிரொலி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 64 ஏரிகள் நிரம்பியது. கனமழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கம் கணிசமாக உயர்ந்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 31 ஏரிகள் முழு கொள்ளளவையும், 33 ஏரிகள் 99 விழுக்காடு கொள்ளளவையும் எட்டியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 528 ஏரிகளில் 28 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 4 ஏரிகள் முழு கொள்ளளவையும், 12 ஏரிகள் 99 விழுக்காடு நிரம்பியுள்ளது.
வாலிபர் மர்ம மரணம்
திருவொற்றியூர்,நவ.14- எர்ணாவூர், பாரத் நகரை சேர்ந்தவர் ராஜி (30). கூலித்தொழிலாளி. செவ்வாயன்று இரவு அவர் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் அருகே தலையில் காயமடைந்த நிலையில் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் காவல்துறையினர் ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜி இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது இருசக்கர வாகனம் சாய்ந்து கிடந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா, என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையடித்த தம்பதி
சென்னை,நவ.14- கோயம்பேடு அய்யப்பா நகர், 2-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருபவர் ஆயிஷா சுல்தானா(73).இவர் சேலத்தைச் சேர்ந்த சா`ஹின் (40) என்பவர் உடன் இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் மூதாட்டி ஆயிஷாவை கட்டிலில் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 5 சவரன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்த சாஹின் தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவத்தில் வேலைக்கார பெண் சா`ஹின் தனது கணவர் சித்திக் அலியுடன் சேர்ந்து மூதாட்டி ஆயிஷாவை கட்டிப் போட்டு கொள்ளையில் ஈடுபட்டு தப்பியது தெரிந்தது. இதற்கிடையே கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள விடுதியில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் கொள்ளை நடந்த இரண்டு மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9.39 டி.எம்.சி. நீர் இருப்பு
சென்னை, நவ. 14- சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9.39 டி.எம்.சி. தண்ணீர் தற்போது கையிருப்பில் உள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர் இருப்பு 2 டி.எம்.சி. அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்க தாகும். கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.செவ்வாயன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருப்பு மொத்த கொள்ளளவு ஆன 3231 டி.எம்.சி. யில் 1857 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.அதே போல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து தொடர்வதால் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. புழல் ஏரியில் வினாடிக்கு 62 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருப்பு மொத்த கொள்ளளவு ஆன 3300 டி.எம்.சி. யில் 2709 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி வினாடிக்கு 278 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருப்பு மொத்த கொள்ளளவு ஆன 3645 டி.எம்.சி. யில் 3118 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியில் 386 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 35 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 500 மில்லியன் கன அடியில் 500 மில்லியன் தண்ணீர் இருக்கிறது.
சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்
விழுப்புரம்,நவ.14- வடமாநில ஊழியர்களை பணியமர்த்து வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடி அலு வலகத்தை ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி-திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட நிலையில், மொரட்டாண்டியில் கடந்த 2007-ஆம் ஆண்டு சுங்கச்சாவடி தொடங்கப்பட்டது. அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த சுங்கச் சாவடியில் கட்டணம் வசூ லிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சுங்கச்சாவடியின் நிர்வாகம் வேறு நிறுவனம் வசம் சென்று விட்டதால், புதிய நிறுவனம் நிர்வாகத்தை கையகப்படுத்தியது. தொடர்ந்து, சுங்கச்சாவடி பணியில் 10க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் பணிய மர்த்தப்பட்டனர். இந்த சுங்கச்சாவடியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஊழி யர்கள் பலர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியதையும், வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்தியதைக் கண்டித்தும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மொரட்டாண்டி சுங்கச்சாவடி அலுவலகத்தை திங்கட்கிழமை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகம், இன்னும் சில நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தீ விபத்து
ராணிப்பேட்டை, நவ. 14 - அரக்கோணம் நேதாஜி நகர் பகுதியில் வசிக்கும் ஹரிதாஸ் மற்றும் பழனி பேட்டை டில்லியப்பன் தெருவில் வசிக்கும் கிரண்குமார் ஆகியோர் வீடுகள் இரு வேறு பகுதிகளில் தீப்பற்றி எரிவதாக ஞாயிறன்று (நவ. 12) நவீன கட்டுப்பாட்டு அறையில் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் உடனடியாக நிலைய அலுவலர் போக்குவரத்து ப. விநாயகம் தலைமையில் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது தென்னை ஓலை வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக பணியாளர்கள் ஊர்தி மூலம் ஒரு தாரை மூன்று நீர் விடு குழாய் வழியாக நீர் பீய்ச்சி அடித்து தீ முற்றிலும் அணைத்துள்ளனர்.
பணியிடத்தில் இயந்திரத்தை திருடியவர் கைது
ராணிப்பேட்டை, நவ. 14 - ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த முசிறி கிராம சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பாறை உடைக்கும் இயந்திரம் திருடு போனதாக வாலாஜா காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வாலாஜா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அதே கல்குவாரியில் பணியாற்றிய திருப்பத்தூர் பகுதியை சார்ந்த சரத்குமார் (31) திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவை பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி,நவ.14- புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி நிறுவனங்களுக்கு புதன்கிழமை (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.