சிஏஏ சட்டத்தை திரும்பப்பெறுக!
இன்று வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்
சென்னை,மார்ச் 12- அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோத மான குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெறக்கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மார்ச் 13 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம், மாநிலப் பொதுச்செயலாளர் ச.சிவக்குமார் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டுவரக் கூடிய அறி விப்பாணையை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அவசர நடவடிக்கையை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றிய போதே நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. சிறுபான்மை மக்கள் மீது குறிப்பாக இஸ்லாமிய மக்களின் குடியுரிமை குறித்து பல்வேறு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த சட்டம் உள்ளதால் இது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக இருக்கும் என்று இந்த சட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கோரிக்கையை முன்வைத்தன. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவியதை தொடர்ந்து ஒன்றிய அரசு அப்போது அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் வைத்தது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி சிறு பான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வாக்குகளை பெறுவதற்காக ஒன்றிய அரசு அவசர அவசரமாக இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திர வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சூழலில் அதை திசை திருப்பும் நோக்கில் 4 ஆண்டுகள் கிடப்பில் உள்ள சட்டத்தை தற்போது அமல்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மேற்படி சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்பது குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள சூழலில் நாட்டின் ஒற்று மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோத மாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குடி யுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஸ்தாபக தினமான மார்ச் 13 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய மாணவரிடம் நகை பறிப்பு
சென்னை, மார்ச் 12- சென்னை ராமாபுரத்தில் சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வ தாக கூறி, தனியாக அழைத்துச் சென்று மிரட்டி நகை பறித்த நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ் (18). இவர், ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். திங்கட்கிழமை தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். அவர் ராமாபுரம் ஆறுமுகம் தெருவில் செல்லும் போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, அங்கிருந்து தடுப்பின் மீது மோதியது. இந்த விபத்தில் ஆகாஷ் ராஜிக்கு கால்,கையில் ரத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ஆகாஷ் ராஜ் தங்களது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்றும் கூறியுள்ளனர். உடனே ஆகாஷ் ராஜ், அவர்களது மோட்டார் சைக்கிளில் ஏறினார். ஆனால் அந்த நபர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக, ராமாபுரம் பூதப்பேடு பகுதியில் உள்ள ஒரு மறைவான பகுதிக்கு ஆகாஷ்ராஜை அழைத்துச் சென்று, கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 6 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அங்கு காயங்களுடன் தவித்த ஆகாஷ்ராஜை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் ராமாபுரம் காவல் நிலையத்தில் வழிப்பறி குறித்து புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய துணை பதிவாளர் பணியிடம் மாற்ற உத்தரவு
காஞ்சிபுரம், மார்ச்.12 - பெரிய காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளராகவும், வங்கி செயலாட்சியராகவும் பணியாற்றியவர் உமாதேவி தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விவரம் வருமாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை வங்கியில் உள்ள 43 காலி பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்கும் வகையில் தேர்வு வெளியீடு அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஏராளமானோர் விண்ணப்பிப்பதில் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என பல கட்டங்களில் தேர்வு விதிமுறை களை பின்பற்றி காலி பணியிடங்களுக்கான உதவியாளர் தேர்வு நடைபெற்றது. இதில் 96 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி தேர்வாக நேர்முகத் தேர்வில் 43 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கடந்த பிப்ரவரி 1அன்று அனைத்து தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் அளித்தார். இதில் 35 நபர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் பெரிய காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கிக்கு தேர்வான 8 உதவி யாளர்கள் பணி ஆணையை பெற்றுக் கொண்டு வங்கிக்கு சென்ற போது, இவ்வங்கியின் செயலாளர்களும் துணைப் பதிவாளருமான உமாதேவி, அவர்களை பணியில் சேர விடாமல் ஒரு மாத காலம் அலை கழித்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளரிடம் புகார் மனு தெரிவித்தும், பணி கிடைக்காத தால் மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களை ஒரு மாத காலமாக அலைக்கழித்து வருவதாகவும் தெரிவித்து தங்கள் குடும்ப சூழ்நிலையை எடுத்துரைத்தனர். இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இந்நிலையில் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் துணைப் பதிவாளர் உமாதேவியை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பெரிய காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் உமாதேவி, தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய துணைப் பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளிடம் 417 மனுக்கள் வாங்கிய கள்ளக்குறிச்சி ஆட்சியர்
மாற்றுத்திறனாளிகளிடம் 417 மனுக்கள் வாங்கிய கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள்ளக்குறிச்சி, மார்ச் 12- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் திங்க ளன்று(மார்ச்.11) பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 417 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டு தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நட வடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பதற்கான காரணங்க ளையும் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மீட்கப்பட்ட செல்போன்கள் ஒப்படைப்பு
வேலூர், மார்ச் 12- திருடுபோன சுமார் ரூ. 32 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்டெடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்கும் வகையில் செல் ட்ராக்கர் என்ற கூகுள் பார்மை வேலூர் மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தியது. மேலும் 9486214166 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று மெசேஜ் அனுப்பி தொலைந்து போன மற்றும் களவு போன செல்போன் குறித்து புகார் தெரிவித்தால் கண்டுபிடித்து வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கட்டமாக சுமார் 92 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பு டைய 522 செல்போன்கள் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வா யன்று நான்காவது கட்டமாக சுமார் ரூ. 32 லட்சம் மதிப்புடைய 150 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் 1032 புகார்கள் வர பெற்றுள்ள நிலை யில் ஒரு கோடியே 24 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பு டைய 672 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது.
4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குக!
புதுவை அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
புதுச்சேரி, மார்ச்.12- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி கள் மாதத்தின் முதல் தேதி யில் வழங்க வேண்டும் என்று அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தி உள்ளது. புதுச்சேரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் பேரவை கூட்டம் முல்லை நகரில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் புதுச்சேரி தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சரவணன், அகில இந்திய வழக்கறி சங்கத்தின் புதுச்சேரி இணைச் செயலாளர் லீலாவதி, அரசு பள்ளி முதல்வர் விஜயா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மக்களவைத் தொகுதி சட்ட மன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் மாற்றுத்திறனாளிக ளுக்கான மொத்த தொகுதி களில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும், புதுச்சேரி அரசு மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் மாதத்தின் முதல் தேதியில் வழங்க வேண்டும். தனியார் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், மாநி லத்தில் முன்பு இயங்குவது போல அனைத்து ரேசன் கடை களும் திறக்க வேண்டும் , சமீ பத்தில் பாலியல் சீண்டல் கொடு மைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறு மிக்கு நியாயம் கிடைக்க அதிக பட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.