சென்னை, செப். 16- திருவொற்றியூர் மண்ட லம் 4ஆவது வார்டில் 22 தெருக்களில் தார் சாலை அமைக்கும் பணி சனிக் கிழமை (செப். 16) துவங்கி யது. திருவொற்றியூர் மண்ட லம் 4ஆவது வார்டுக்குட் பட்ட 89 சாலைகள் தார் சாலைகளாக, பேவர் பிளாக் சாலைகளாக அமைத்திட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் முதல் கட்டமாக 21 தார் சாலைகளும், ஒரு பேவர் பிளாக் சாலையும் அமைக் கும் பணி ஜோதிநகர் 4ஆவது தெருவில் துவங்கி யது. ஜோதிநகர் 4, 5, 6 தெருக் கள். சண்முகபுரம் 2ஆவது தெரு. ராமநாதபுரம் 2, 3, 4 மற்றும் 10ஆவது தெரு, பாடசாலை தெரு. காமராஜ் நகர் 4, 5 தெருக்கள். பிருந் தாவன் நகர் 3ஆவது தெரு. கிரிஜா நகர் பிரதான சாலை. மல்லிகை தெரு. கண்ணியலால் லேஅவுட் 2ஆவது தெரு. எர்ணீஸ் வரர் நகர் 4ஆவது தெரு. திருவீதியம்மன் நகர் 5ஆவது தெரு ஏடி காலனி 6ஆவது தெரு ஆகிய 22 தெருக்கள் தார் சாலைகளாக அமைக்கும் பணி துவக்கப் பட்டுள்ளது. இதில் மாமன்ற உறுப்பி னர் ஜெயராமன், 4ஆவது வார்டு உதவி பொறியாளர் கோதண்டராமன், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.