districts

img

எர்ணாவூர் சுடுகாட்டுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படும்

சென்னை, பிப். 16- எர்ணாவூர் சுடுகாட்டுக்கு செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்படும் என திருவொற்றியூர் 4ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் ஆர்.ஜெயராமன்  தெரிவித் துள்ளார். சென்னை மாநகராட்சிக் குட்பட்ட திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் ஜோதி நகர், டி.எஸ்.கோபால் நகர், முருகப்பா நகர்,ஜெய்`ஹிந்த் நகர், கிரிஜா நகர், ராமநாதபுரம், திருவீதியம்மன் நகர், ஆதிதிராவிடர் காலனி, முல்லை நகர், பிருந்தாவன் நகர், எர்ணீஸ்வரர் நகர், மாகாளியம்மன் கோயில் தெரு, மேட்டுத் தெரு, பஜனை கோயில் தெரு, காந்தி நகர், கன்னிலால் லே அவுட், காமராஜ் நகர், பெருமாள் கோயில் தெரு, மகாலட்சுமி நகர், பாலாஜி நகர், சண்முகபுரம், பூம்பு கார் நகர் உள்ளிட்ட பகுதி கள் உள்ளன. இங்கு 60 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நடைபெறவுள்ள நகர்ப் புற உள்ளாட்சித் தேர்த லில் சென்னை மாநகராட் சிக்குட்பட்ட திருவொற்றியூர் 4ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆர். ஜெயராமன் போட்டியிடு கிறார்.

தாங்கள் வெற்றிபெற் றால் என்ன செய்வீர்கள் என்று அவரிடம் கேட்கப் பட்ட கேள்விக்கு, நான் நகரமன்றத் தலைவராக இருந்த போது, ஜவஹர்லால் நேரு நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பகுதி மக்கள்  அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்து ள்ளேன். கிடப்பில் கிடந்த பாதாளச் சாக்கடைத் திட்ட த்தை மீண்டும் அமல்படுத் தினேன். பூம்புகார் நகர்,  காந்தி நகர் பகுதி மக்க ளுக்கு பட்டா வாங்கிக் கொடுத்துள்ளேன். முதி யோர், விதவை பென்சன், திருமண உதவித் தொகை போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுத் தந்துள்ளேன். சொத்து வரி உயர்விற்கு எதிராக போராடி வரியை குறைத் துள்ளேன். இப்போது நான் வெற்றி பெற்றால் ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார மையத் தில் மகப்பேறு வசதியை மீண்டும் ஏற்படுத்தித் தருவேன். ஜோதி நகர், வி.பி. நகர் கோயில் மனைகளில் குடியிருப்பவர்களின் வாடகை உயர்த்தப்பட்டதை குறைத்திட நடவடிக்கை மேற்கொள்வேன். ராமநாத புரம், திருவீதியம்மன் நகர், ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு பட்டா கிடைக்க முயற்சி எடுப்பேன். 25 கிராமங்களின் பயன்பாட்டில் உள்ள எர்ணாவூர் சுடுகாட் டுக்கு ரயில்வே ரங்கப்பாதை அமைத்துக் கொடுப்பேன். எர்ணாவூர் விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச் சுவர் அமைப்பேன். இங்குள்ள பூங்காக்களை மேம்படுத்தி உடற்பயிற்சி, விளையாட்டு உபகரணங்கள் அமைத்துக் கொடுப்பேன். முக்கிய சாலைகளின் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பேன். எர்ணாவூர் திருவீதி யம்மன் கோயில் தெருவில் உள்ள பொதுக் கழிப்பிடதை சீரமைத்து முறையாக பரா மரிக்கவும், எர்ணாவூரில் அகற்றப்பட்ட மருத்துவ மனையை மீண்டும் அமைக் கவும் நடவடிக்கை எடுப்பேன். மாகாளியம்மன் மற்றும் எர்ணீஸ்வரன் கோயில் மனையில் குடியிரு ப்போருக்கு அறநிலையத் துறை அளித்த நோட்டீசை திரும்பப் பெற வைத்து,

பட்டா வாங்கித் தர முயற்சி மேற்கொள்வேன். கிரிஜா நகரில் பாதியில் நின்று போன மழைநீர் வடிகால்வாயை பக்கிங்காம் கால்வாயோடு இணைக்க நடவடிக்கை எடுப்பேன். வி.பி.நகர் சமூக நலக் கூடத்தை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன். வார்டு  முழுவதும் பாதாள சாக் கடை, குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை விரைந்து முடிபேன். ஜோதி நகர்,  டி.எஸ். கோபால் நகர், முருகப்பா நகர், ஜெய்`ஹிந்த் நகர் பகுதி களில் வடிகால்வாய் களை தூர்வாரி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். மாதத் திற்கு ஒருமுறை குறை  தீர்க்கும் முகாம் நடத்தி குறிப்பிட்ட கால இடை வெளியில் அந்த குறைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்வேன்.  இங்குள்ள உட்புறச் சாலைகளை படிப்படியாக தார் சாலையாக மாற்று வேன். குப்பைக் கழிவுகளை  தினசரி அகற்ற நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக அர சின் நலத்திட்ட உதவிகளை எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்க ளுக்கும் பெற்றுத் தருவேன். மக்களோடு மக்களாக நின்று அவர்களின் நலனுக் காக பாடுபடுவேன் என்றார்.