திருவள்ளூர், ஏப்.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபாலின் தாயார் முத்தம்மாள் (72), வயது மூப்பின் காரணமாக ஞாயி றன்று (ஏப் 27), காலமானார். அவரின் உடலை திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக திங்களன்று (ஏப் 29), வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தாயார் முத்தாம்மாள், பொன்னேரி அருகில் உள்ள சிறுவாக்கம் கிராமத்தில் ஞாயிறன்று (ஏப் 28), மாலை கால மானார். அவரின் உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ப.சுந்தர ராசன், எஸ்.நம்புராஜன், எம்.ராம கிருஷ்ணன், வடசென்னை மாவட்ட செய லாளர் எல்.சுந்தர்ராஜன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர், வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், வி.ஜானகிராமன், திருவேட்டை, எல்ஐசி ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மனோ கரன், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், கே.ராஜேந்திரன், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், ஏ.ஜி.சந்தானம், இ.மோகனா, ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், வட்டச் செயலாளர்கள் எஸ்.இ.சேகர் (பொன்னேரி), இ.ஜெயவேல் (மீஞ்சூர்), இ.ராஜேந்திரன் (கும்மிடிப்பூண்டி), ஜெ.ராபர்ட்எபிநேசர்(பூந்தமல்லி), மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், வெகுஜன அமைப்புக்களின் தலைவர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் நீலமேகம், மத்திய மாவட்டச் செயலாளர் தளபதி சுந்தர், சிபிஐ மாவட்ட நிர்வாகிகள் ஏ.எஸ்.கண்ணன், ஜெ.அருள், பாலன், மனித நேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப் அலி, மாவட்ட நிர்வாகிகள் அப்துல் கலாம், முகமது அலி ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தொலைபேசி மூலம் தலைவர்கள் இரங்கல் மறைந்த முத்தம்மாளுக்கு கட்சி யின் மத்திய குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பி.சண்முகம், ஏ.கே. பத்மநாபன், மாநில செயற்குழு உறுப்பி னர் கே.கனகராஜ், எஸ்.கண்ணன், டி.ரவிந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், தீக்கதிர் சென்னை பதிப்பு நிர்வாகிகள் உட்பட பலர் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தனர். இரங்கல் கூட்டம் தலைவர்கள் புகழஞ்சலி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சமுக மாற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கோபாலின் கட்சி பணிக்கு உறுதுணையாக இருந்தவர் அவரின் தாயார் முத்தம்மாள். மறைந்த அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வு கூடத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முத்தம்மாளின் குடும்பம் முழுவதும் கட்சிக்கு பல்வேறு வகையில் பணியாற்றி வருவதை இறுதி நிகழ்ச்சியில் பேசிய சிபிஎம் தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.