தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினரும் எழுத்தாளருமான மு.இக்பால் அகமது எழுதிய " பற்றியெரியும் மணிப்பூர், ஏன், எதனால், யாரால்" என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (செப்.10) திருநின்றவூரில் நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.அனீப் தலைமையில் மாநில செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் நூலை வெளியிட திருநின்றவூர் கிளரீசியன் சபை போதகர் வி.மைக்கேல் ப்ரான்சிஸ் பெற்றுக்கொண்டார். மாவட்ட நிர்வாகிகள் எஸ்.மோசஸ்பிரபு, ஏ.அப்ஸல் அகமது,ஜெ.ராபர்ட் எபிநேசர், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் டி.பன்னீர்செல்வம், எழுத்தாளர் மு.இக்பால் அகமது ஆகியோர் பங்கேற்றனர்.