தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் புதுச்சேரி மாநிலம் பாகூரில் நடைபெற்றது.சிபிஎம் பாகூர் கொம்யூன்கமிட்டி செயலாளர் ப.சரவணன் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் கலந்து கொண்டு தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில் மாநில குழு உறுப்பினர் கலியன், கமிட்டி உறுப்பினர் இரா.சேகர், பெரியார் நகர் கிளை செயலாளர் ஹரிதாஸ், மூத்த தோழர்கள் சண்முகம், மு.முனியன், மற்றும் ஜெயராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள்.