எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், தொழிலாளர், விவசாய விரோத ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை கண்டித்தும் வெள்ளியன்று (பிப். 16) நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காப்பீட்டு ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் 2, எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் சென்னை பாரிமுனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கு.மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துறைமுக தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் டி.நரேந்திரன், தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் உதவி பொருளாளர் வி.ஜானகிராமன், முகவர்கள் சங்க சென்னை கோட்ட பொதுச்செயலாளர் டி.கே.வெங்கடேசன், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம் 2இன் செயலாளர் ஆர்.சர்வமங்களா ஆகியோர் பேசினர்.