districts

img

குண்டும் குழியுமாக சாலை: மக்கள் அவதி

 கிருஷ்ணகிரி,செப்.23-  ஊத்தங்கரை வட்டம், முனியப்பன் கோவில் முதல் புதூர் வரை செல்லும் தார் சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சீர்படுத்தப்படாமல் குண்டும் குழியுமாய் மழையால் சேரும் சகதிமாக காணப்படுகிறது.  இச்சாலையில் தினமும் காலை, மாலை ஒரு முறை மட்டுமே பேருந்து சென்று வருவதால் பெரும்பாலான கிராம மக்கள் இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக சாலை மிக மோசமான நிலையில் உள்ளதால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாலையில்  ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வாகனம் ஓட்ட அஞ்சுகின்றனர். எனவே உடனடியாக முனியப்பன் கோயில் முதல் புதூர் வரை செல்லும் கந்தல் கந்தலான சாலையைஉடனடியாக சீர்படுத்திட வேண்டும் என  இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்