districts

img

நிவாரணம் கோரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பு

சென்னை, டிச.21 - மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நியாய விலைக்கடை வாயிலாக ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றிய, மாநில அரசு உயர்  அதிகாரிகள், வருமான வரி செலுத்து வோர், சர்க்கரை குடும்ப அட்டை தாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பை குறிப்பிட்டு விண்ணப் பிக்கலாம் என அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், டோக்கன் பெற்று பணம் வாங்க வரும் பயனாளிகளை விட, விண்ணப்பம் பெற்று நிவா ரணம் கோரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வருமானவரி செலுத்துபவர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஒரே குடியிருப்பில் வருமான வரி செலுத் தும் சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, மற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. விடுபட்ட வீடுகள் தண்ணீரால் சூழப்பட்ட ஒரு தெருவில் உள்ள ஒருசில  வீடுகளுக்கு நிவாரணம் விடுபட்டுள் ளது. குறிப்பாக ஆவடி காமராஜர் நகர் 10-வது தெருவில் உள்ள அமுதம் நியாயவிலைக்கடைக்கு உட்பட்ட பகுதியில் 630 அட்டை தாரர்கள் உள்ளனர். இதில், சுமார்  100 பேருக்கு நிவாரண உதவிக்கான  பட்டியலில் பெயர் இடம் பெற வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் அப்பட்டியலில் குடும்ப அட்டைதாரர்கள் விவரங்கள்  ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள தால், ஆங்கிலம் தெரியாதவர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்க முடியாமல் அவதிப்பட்டனர். பெயர் இருந்தும்... சில இடங்களில் பட்டியலில் பெயர்  இருந்தும் டோக்கன் வழங்கப்படா தால் அவர்களும் நிவாரணம் கோரி விண்ணப்பித்து வருகின்ற னர். அதேபோல், விண்ணப்ப படிவங்கள் காலியாக விட்டதாகக்  கூறி பொதுமக்கள் திருப்பி அனுப் பப்படுகின்றனர். மேடவாக்கம் பாபு நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் புதன்று விண்ணப்பம் இல்லாததால் பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். இதற்கிடையே, நிவாரணம் கோரி விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சம்பந்தப்பட்ட அலுவலர்களே விண்ணப்பம் வழங்குவதை குறைத்து வருவதாக வும் கூறப்படுகிறது.  புயல், மழை என்றால் பாதிப்பு  என்பது நபருக்கு நபர் வேறுபடும்  என்பதால், அரசு உயர்அதிகாரிகள் தலையிட்டு, இதுபோன்ற பிரச்சினை களுக்குத் தீர்வுகாண வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.