ஆவடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் காலனியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வியாழனன்று (மார்ச்.17) ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட ஸ்கூட்டரை அமைச்சர் வழங்கினார். மேலும் உதவித்தொகை ரூ.2000-மாக உயர்த்தி வழங்கப்பட்ட ஆணையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.