districts

img

வட்டார மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்

கள்ளக்குறிச்சி, அக்.13 - தியாகதுருகம் வட்டார மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கள்ளக்குறிச்சி, தியாகதுருக வட்டத்தில் 14 வது மாநாடு நடைபெற்றது. தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் கட்சிக்கொடியை வட்டக்குழு உறுப்பினர் ஆர்.செல்வராஜ்  ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு ஜி. அருள்தாஸ் வரவேற்புரை ஆற்றினார். பி. மணிஅஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வேலை அறிக்கையை வட்ட செயலாளர் வே. ஏழுமலை சமர்பித்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர் கே.சீனுவாசன் ஆகியோர் பேசினர். மாநாட்டை துவக்கி வைத்து  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், நிறைவு செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் ஆகியோர் பேசினர். வட்டக்குழு தேர்வு 13 பேர் கொண்ட வட்ட குழுவிற்கு செயலாளராக  வே.ஏழுமலை தேர்வு செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சியில் அரசு சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தியாகதுருகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும், கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக மேம்பாலம் அமைத்தும்,  சாலைகளை விரிவாக்கம் செய்தும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும், சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை ரயில் பாதை பணிகளை விரைவில் முடித்திடவேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.