மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் போதையில் கிழே விழுந்து பலி
திருவள்ளூர், ஜன 20- திருவள்ளூர் கிழக்கு குளக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடே சன். (44). இவரது மனைவி புவனேஸ்வரி (40). தையல் தொழிலாளியான வெங்கடேசன் வீட்டிலேயே துணி தைத்து பிழைத்து வருகிறார். இவர்களுக்கு நவீன்குமார், (22), லோகேஷ் (20).என்ற 2 மகன்கள் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் தினமும் குடித் துவிட்டு வீட்டில் குடும்பத் தாருடன் தொடர்ந்து சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை காலை வந்தவர் மாலை வீட்டில் மது அருந்தும் போது கணவன் மனைவிக் கிடையே தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதனால் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து மனைவியை குத்துவதற்காக வெங்கடே சன் சென்றுள்ளார். அப்போது மது போதையில் தவறி கீழே விழுந்தவர் தான் வைத்திருந்த பாட்டில் கழுத்துப் பகுதியில் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருவள்ளூர் நகர காவல் துறை ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உயிரிழந்த வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
சென்னை, ஜன. 20- சென்னை தண்டையார்பேட்டையில் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றவர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (49). இவர் இரும்பு கேட்டுகளை பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார். அரிகிருஷ்ணன் பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான கோயம்புத்தூர் சென்றார். பின்னர் அங்கிருந்து வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 சவரன் நகை, 6,000 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 கிலோ கஞ்சா பறிமுதல் : பட்டரவாக்கத்தில் ஒருவர் கைது
அம்பத்தூர், ஜன, 20- அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிக்கு பட்டரவாக்கம் ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை யினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமாக பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது, அதில் 10 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.ஆஷி (42) என்பதும், இவர் ஆந்திர மாநிலம் துணி பகுதியில் இருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற் பேட்டையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரியில் 40 ஏக்கரில் சுற்றுலா பெருந்திட்டம்
சென்னை, ஜன. 20- பருவ கால சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரி நகரினை, தொலைநோக்குப் பார்வையுடன், உணர்வுப்பூர்வமான சுற்றுலாத் தலமாக மாற்றும் பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல கட்டுமான நிறுவனமான காசாகிராண்ட் இதற்காக சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷைன் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளது. ‘ப்ராஜெக்ட் மேன்’ என்ற தலைப்பில், மேற்கொள்ளப்பட உள்ள இந்த திட்டமானது, பிராந்திய மற்றும் உலகளா விய சிறந்த சுற்றுலாவுக்கான இடமாக கன்னியாகுமரியை மற்ற உள்ளது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச விருந்தினர் களுக்கான சுற்றுலா சுற்றுச்சூழல் அமைப்பை ஒழுங்கமைத்து, இப்பகுதியை இந்தியாவின் கேப் டவுனாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதுமை திட்டத்திற்காக இந்நிறுவனங்கள் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளன. கன்னியாகுமரியில் ஒரு சிறந்த சுற்றுலா தலத்தை உருவாக்கும் வகையில் முதல் கட்டமாக இந்த திட்டம் 40 ஏக்கரில் அமைய உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கன்னியா குமரியை பொழுதுபோக்குமிக்க, சுற்றுச் சூழலுக்கு உகந்த ஆரோக்கிய சுற்றுலா மையமாக மாற்றவும் சர்வதேச தரத்தில் 1000பேர் அமரக்கூடிய மாநாட்டு கூடம் ஒன்றை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் திரையரங்குகள் மற்றும் 100 கடைகளுடன் கூடிய பிரமாண்ட வணிக வளாகம் ஒன்றும் கட்டப்பட உள்ளது என்று காசாகிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மன்தீப் சிங் கூறியுள்ளார்.
பணிப்பெண்ணுக்கு கொடுமை: அறிக்கை சமர்ப்பிக்க மகளிர் ஆணையம் உத்தரவு
சென்னை, ஜன. 20- சென்னையில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிப்பெண் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள் ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பட்டிய லின பெண் 18 வயது நிறை வடைவதற்கு முன்பே திருவான்மியூரில், திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதி வாணன் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, ஆண்ட்ரோ மதிவாணனின் மனைவி மர்லினா அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. உடல் முழு வதும் காயங்களுடன் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மர்லினா ஆகியோர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. சம்பந்தப்பட்ட பெண், கடந்த டிசம்பர் மாதம் 18 வயதை எட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலை யில், தேசிய மகளிர் நல ஆணையமும் இந்த பிரச் சனையில் தலையிட்டுள் ளது. அதன்படி, இளம்பெண் மீதான தாக்குதல் தொடர்பாக ஐபிசி பிரிவு 323 மற்றும் 354 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது.
முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீடு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
விழுப்புரம்,ஜன.20- முன்னாள் சிறப்பு டிஜிபிதாக்கல் செய்துள்ள பாலியல் மேல்முறையீடு வழக்கு விசாரணை வரும் 22 தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாசுக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் புகார் அளிக்க சென்ற அந்த பெண் அதிகாரியின் காரை மறித்து முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்தது. இருவரும் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன் மீதான விசாரணையில் அரசு தரப்பும், முன்னாள் எஸ்.பி., தரப்பும் வாதிட்டு முடித்தனர் . முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ் தரப்பினர் தொடர்ந்து அவகாசம் கேட்டு வந்த நிலையில், வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம் மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியாது என்றும் விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கை ஜனவரி 24 க்குள் விசாரித்து, தீர்ப்பளிக்கவும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்தி வைக்க கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பூர்ணிமா, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வரும் 24 ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும். இதனால் வழக்கின் விசார ணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்ப தாக தெரிவித்தார். அன்றைய தினம் உச்ச நீதிமன்ற உத்தரவை சமர்ப்பிக்கலாம். இல்லை யெனில் உங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., தரப்புக்கு உத்தரவிட்டார்.
பாலியல் வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
விழுப்புரம், ஜன. 20- சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எலவடி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் இவரது மகன் பழனிசாமி (38), இவர் இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி 10 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட பழனிசாமிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். நீதிபதியின் தீர்ப்பை தொடர்ந்து பழனிசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செம்மண் குவாரி வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
விழுப்புரம், ஜன.20- முன்னாள் அமைச்சர் க. பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2006-2011 ஆண்டில் திமுக ஆட்சியின் போது, விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியில், அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உட்பட 8 பேர் மீது கடந்த 2012 ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விசாரணையில் ராஜமகேந்திரன், கோத குமார், சதானந் தன், ஜெயச்சந்திரன், கோபிநாத் மட்டும் ஆஜராகினர். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்க கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையில், அரசு தரப்பும், எதிர் தரப்பும் ஜெயக்குமார் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
தீ விபத்து: வீட்டு உபயோக பொருட்கள் சேதம்
கிருஷ்ணகிரி,ஜன.20 , கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள நாகரசம்பட்டி அருகே என்.தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தானியங்கள் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்பி லான பொருட்கள் சேத மடைந்தன. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.