திருவண்ணாமலை, ஜன.1 - தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திரு வண்ணாமலை மாவட்ட கபடி கழகம் இணைந்து நடத்தும் 68ஆவது மாநில அளவிலான பெண்க ளுக்கான கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் திரு வண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை சட்டப்பேரவை துனைத் தலைவர் கு.பிச்சாண்டி வெள்ளியன்று (டிச. 31) தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற அதிகளவில் பயிற்சிகள் பெற வேண்டும், ஒடிசா மாநில முதலமைச்சர் விளையாட்டுதுறைக்கு அதிக வசதிகள் செய்து கொடுத்ததால் அம்மாநில வீரர்கள் ஒலிம்பிக் போட்டி யில் வெண்கலம் பெற்ற னர். அரசு துறைகளிலும் விளை யாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால் மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். இதில் திருவண்ணா மலை, சென்னை, திரு வள்ளூர், வேலூர், சேலம், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி களில் வெற்றிபெறும் மாணவிகள் ஜன.18ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெறும் தேசிய கபடி போட்டிகளில் பங்கு பெறு வார்கள். இதில் மாநில தடகள சங்கத்தின் துனைத்தலைவர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.