districts

img

சிறுமி மாயம் : உறவினர்கள் சாலை மறியல்

புதுச்சேரி, மார்ச் 4- காணாமல் போன 9 வயது சிறுமியை மீட்டு தரக்கோரி புதுச்சேரி யில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர், கண்ணதாசன் வீதியில்  வசிக்கும் நாராயணனின் மகள்  ஆர்த்தி (வயது 9)   கடந்த மார்ச் 2 ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. புகார் அளித்து இரண்டு நாட்கள் ஆகியும் சிறுமியை கண்டுபிடித்து தராத காவல்துறையை கண்டித்து சிறுமியின் உறவினர்கள் மற்றும்  அப்பகுதி மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு எதிரில் நடைபெற்ற மறியல்  போராட்டத்தில் சோலை நகர் பகுதி மக்கள் திரளாக பங்கேற்ற னர். தகவல் அறிந்த காவல்துறை அதி காரிகள் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சிறுமியை கண்டு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.விரைவில் கண்டு பிடித்து விடுவோம் என்றும், எனவே மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.