districts

கிருஷ்ணகிரியில் மாயமாகும் மலைகள்

ஓசூர், ஆக.20-

      கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மலைகள் வெட்டி கரைக்கப்பட்டு, தினமும் 3,000 லோடு கனிம வளங்கள் கர்நாடகாவிற்கு கடத்தப் படுவதால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.

     தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மலைகளுக்கு பஞ்சமில்லை. அதனால், கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக உள்ளன. மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், 110க்கும் குறைவான கல் குவாரிகள் மட்டுமே உரிய அனுமதியுடன் செயல்படு கிறது. மற்றவை, சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறாமல் இயங்கி வருகின்றன.

    குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள், பக்கத்து மாநிலமான கர்நாட காவுக்கு கடத்தப்படுகின்றன. குவாரிகளின் வருமானத்தை முறையாக கணக்கிட்டால் தலை சுற்றி விடும். அதனால் தான், ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அவர்க ளது பினாமிகள், வாரிசுகள் பெயரில் அதிக அளவில் கல் குவாரிகளை வைத்துள்ள னர். இங்குள்ள, 90 விழுக்காட்டுக்கும் அதிக மான குவாரிகள், அரசின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு, அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி தான், கர்நாடகா மாநில ரியல் எஸ்டேட் நிறு வனங்கள் நம்பியுள்ளன. இதனால் பல குவாரிகள் பல நூறு அடி ஆழத்திற்கு சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி, கர்நாடகாவிற்கு கடத்துகின்றன. மலைகளை வெட்டி எடுக்கும் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. மாவட்டத்தில், கொரட்டகிரி உட்பட பல்வேறு கிராம மக்கள், குவாரி மற்றும் கிரஷர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.

     குவாரிகளால், பல்வேறு கிராமங் கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால், வீடுகளில் விரிசல் ஏற்படு கிறது. குவாரி செயல்படும் பகுதியில் உள்ள  சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத  அளவுக்கு சிதலம் அடைந்து உள்ளன.  நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. அதனால் பல கிராமங்கள், இன்றளவும்  குவாரிகள் செயல்பட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அதையும் மீறி பல புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

     இதில் மக்கள் பங்கேற்று எதிர்ப்பு தெரி வித்தாலும், அதையும் மீறிதான் மாவட் டத்தில் கனிம வளங்களை கொள்ளைய டிக்கின்றனர். குவாரிகளில் அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக கற்களை வெட்டி எடுத்து, வெட்டி எடுத்த அளவை குறைத்து காண்பித்து, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை குறைத்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர். பல குவாரிகள் உரிம மின்றி நடப்பதால், அரசுக்கு பெரிய அள வில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.