districts

img

தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விவசாயிகள் சங்க தலைவர்களிடம் ஆட்சியர் உறுதி

திருவள்ளூர், டிச 28- சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அமைக்க,  நிலங்களை இழந்த அனைத்து விவசாயிகளுக்கும் அதிக பட்ச இழப்பீடு தொகை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேச்சு வார்த்தையின் போது தெரிவித்தார். சென்னை முதல் திருப்பதி வரை யிலான தேசிய நெடுஞ்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தி  கடந்த 15 ஆண்டுகளாக உரிய இழப்பீடுத் தொகை  வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து விவசாயிகளை அணி திரட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏற்கனவே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. எனினும் உரிய இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த சூழலில் திருவள்ளூரை அடுத்த பட்டரைபெருமந்தூரில் உள்ள சுங்கச்சாவடி  முற்றுகை போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் தலை மையில் டிச 23 அன்று நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். பின்னர் அன்று மாலை விடுதலை செய்த பின்பும் விவசாயிகள் வெளியே செல்லாமல் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை  இதனைத் தொடர்ந்து வெள்ளி யன்று (டிச 27), மாலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் விவசாயிகள் சங்கத்தின் தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடை பெற்றது. அப்போது  புதிதாக நிலத்தை கையகப்படுத்துகிற போது விவசாயிகளுடைய அனுமதி இல்லா மல் அளவீடு பணிகளையும், எல்லை கல் நடும் பணிகளையும் செய்வது சட்டவிரோதம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு ஒரே கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சமமாக அதிக பட்ச இழப்பீடு தொகை பெற்று தரப்படும். இப்பணியை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் 50 மனுக்கள் வீதம்  விசாரணை நடத்தி தீர்வு காணப்படும்  என உறுதி அளித்தார். இந்த பேச்சு வார்த்தையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. சண்முகம், மாநிலச் செயலாளர் பி. துளசி நாராயணன், மாவட்ட நிர்வாகிகள் ஜி.சம்பத், சி.பெருமாள், என். ஸ்ரீநாத், ஜெயச்சந்திரன் ஆகியோர் தலை மையில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.