அம்பத்தூர், ஏப். 28- சென்னையை அடுத்த திருமுல்லை வாயல் அடுக்குமாடி குடியிருப்பின் 4 வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் திருமலைவாசன் நகரில் உள்ளது விஜிஎன் ஸ்டப் போர்ளட் அடுக்குமாடி குடியிருப்பு. இதில் 1,500 மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த அடுக்குமாடி குடி யிருப்பின் ‘பி’ பிளாக் 4 வது மாடி பால்கனியில் 7 மாத குழந்தை ஒன்று தவழ்ந்து விளையாடிக் கொண்டி ருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. 2வது மாடி மேற்கூரை ஒன்றில் தொங்கியபடி இருந்துள்ளது. இதை அந்த குடியிருப்புக்கு எதிரே குடி யிருப்பவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கு கூடிய இளை ஞர்கள் குழந்தையை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதை அறியாமல் அந்தக் குழந்தை மேற் கூரையின் மேல் சலனமின்றி இருந்தது. ஒரு கட்டத்தில் குழந்தை மேற்கூரை யில் இருந்து லேசாக சறுக்கியது. அதைப் பார்த்த பெண்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். அதுவரை அமைதியாக இருந்த குழந்தை சத்தம் கேட்டவுடன் அழத்தொடங்கியது. இதற்கிடையே குழந்தை தவறி விழுந்தால் அதை பாதுகாப்பாக மீட்கும் வகையில் கீழே போர்வையை பிடித்த வாறு இளைஞர்கள் தயாராக இருந்த னர். அதேநேரம் ஜன்னல் வழியாக ஏறி குழந்தையை மீட்கும் நடவடிக்கையின் இளைஞர்கள் ஈடுபட்டனர். அப்போது, ஜன்னல் வழியாக மேலே ஏறிய இளைஞர் ஒருவர், குழந்தையை ஒற்றைக் கையால் லாவக மாக பிடித்து தூக்கி காப்பாற்றினார். இதனால் அந்த குழந்தை நல்வாய்ப் ்பாக நூலிழையில் உயிர் தப்பியது. அதன் பின்னர் தான் அங்கிருந்த வர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். குழந்தையை மீட்க துரிதமாக செயல்பட்ட இளைஞர்களுக்கு பாராட் டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த மீட்புப் பணியின்போது, குழந்தையின் கை மற்றும் கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. குழந்தையை உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமுடன் இருப் பதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த குடி யிருப்பில் வசித்து வந்த வெங்கடேஷ் -ரம்யா தம்பதியின் 7 மாத குழந்தை ஹைரின் என்பது தெரிய வந்தது.