சென்னை கடற்கரை - கோட்டை இடையே 4வது ரயில் பாதை மார்ச் மாதம் திறப்பு
சென்னை, அக். 11- சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும் இடையே எழும்பூர் பிரிவில் இருந்து 3 ரயில்வே தடங்க ளும், கோட்டை நோக்கி பறக்கும் ரயில் சேவைக்கான 2 தடங்களும் இருக்கின்றன. தற்போது எழும்பூர் கடற்கரை இடையே 4 வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தட மானது வருகிற மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே தெற்கு ரயில்வே சார்பில் 4ஆவது வழித்தட திட்டப்பணி கள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 7 மாதங்களுக்குள் முடிக்கப்படும். 4ஆவது வழித்தட திட்டப்பணிகள் ஏற்கெனவே மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் பறக்கும் ரயில்கள் இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் கடற்கரை ரயில் நிலையம் வரை இயக்கப்படும். இருப்பினும் 4ஆவது பாதை திட்டம் முடிந்ததும் பறக்கும் ரயில்கள் கோட்டையில் இருந்து கடற்கரைக்கு ஒரே வழித்தடத்தில் இயக்கப்படும். ஏனெனில் தற்போது பயன்படுத்தப் படும் இரண்டு வழித்தடங்கள் ஒன்று சரக்கு ரயில் செல்வதற்கும் மற்றொன்று விரைவு ரயில்கள் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒரு பகுதி நிலத்தை பெற முடியாததே பறக்கும் ரயில் சேவையின் கோட்டை மற்றும் கடற்கரை ரயில் நிலை யங்களுக்கு இடையே ஒரு பாதையை கைவிட வேண்டியதற்கு காரணமாகும். பார்க் டவுன், கோட்டை ரயில் நிலை யங்களில் புதிய பாதைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வரு கின்றன. தற்போது கூவம் ஆற்றின் ஓரம் 4ஆவது வழித்தடம் அமைப்பதற்காக பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
காவல்துறை அத்துமீறல்: செவிலியர் சங்கம் கண்டனம்
சென்னை, அக். 11 - செவிலியர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறைக்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.சுபின் விடுத்துள்ள அறிக்கையில், “ பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலி யுறுத்தி அக்.10 அன்று டிஎம்எஸ் வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்தில், காவல்துறை அத்துமீறி செயல்பட்டது. பெண் செவிலியர்க ளுக்கு உடல் ரீதியான துன் புறுத்தல்களை செய்த ஆண் காவலர்கள், அவதூறான வார்த்தைகளை பயன் படுத்தி மனதளவிலும் துன்புறுத்தி, இழுத்துச் சென்று கைது செய்தனர். கைது செய்த பெண்களை பல இடங்களில் அடைத்து வைத்து துன்புறுத்தினர். இத்தகைய அராஜக போக்கில் ஈடுபட்ட காவ லர்கள் மீது தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும். போராட்டங்களின் போது அத்துமீறல்கள் நடை பெறாமல் இருக்க உறுதி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
குழந்தையை கடத்தியவர் தற்கொலை
கோவை,அக்,11 குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவையில் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது பிரேதப் பரி சோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தினார்.
காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி
சென்னை,அக்.11- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் நெருங்க முடியாத அருவிகள்! பாதை வசதி ஏற்படுத்த கோரிக்கை
கொடைக்கானல், அக்,11 கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறையில் உள்ள ஓராவி அருவி, அஞ்சு வீடு அருவி, தாண்டிக்குடி அருகேயுள்ள புல்லாவெளி அருவி, வில்பட்டியில் உள்ள குதிரையாறு அருவி, போளூரில் உள்ள புலவிச்சாறு அருவி உள்ளிட்டவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாப் பட்டியலில் இணைக்கப்பட்டன. அருவிகளுக்குச் சென்று வர பாதை வசதி, அருகில் சென்று ரசிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று உள்ளுர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மாநில அரசை வலியறுத்தியுள்ளனர்.
ஆவின் பொருட்களை விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி,அக்.11- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆவின் நிறு வனத்தின் பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறிய சின்னசேலத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைமை அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில்(திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 9:45 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 904748 0560, 9787973450 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
திருடு போன நகைகள் ஒப்படைப்பு
வேலூர், அக். 11 - வேலூர் மாவட்டத்தில் தொலைந்த மற்றும் திருடு போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துச்சாமி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் முன்னி லையில் நடைபெற்றது. இதில் சுமார் 40லட்சம் மதிப்பு டைய 210 செல்போன்கள் உரிய வர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது.