districts

img

கோவில் பொது இடம் ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

ராணிப்பேட்டை, டிச. 18 – ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராமம் காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிள்ளையார் கோவில் பொது இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து அப்பகுதி கிராம பொதுமக்கள் வாலாஜா- பாலாறு அணைக்கட்டு சாலை அம்பேத்கர் சிலை அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா காவல்துறை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.